ℹ️ About the book

✍️பிரபஞ்சனின் சிறுகதைகள் காட்டும் யதார்த்தம் மிகவும் நுண்மையானது. சமூக, பொருளாதார, உளவியல் நெருக்கடிகளுக்கு உள்ளான மனிதர்களின் துயரங்களைப் பேசும் இக்கதைகள் அன்பால் மட்டுமே மனிதர்கள் மீட்சி பெற முடியும் என்பதை வலியுறுத்துகின்றன. பிரபஞ்சன் கதைகளில் வரும் பெண்கள் அபூர்வமானவர்கள். வேதனைகளைத் தாண்டி வாழ்க்கையைக் காத்திரமாக எதிர்கொள்ளும் தைரியம் கொண்டவர்கள். அன்பின் பொருட்டு அவலங்களை சகித்துக் கொண்டு வாழ்பவர்கள். அந்த வகையில் அவரை தி.ஜானகிராமனின் வாரிசு என்றே கூறுவேன். மொழிநுட்பத்திலும், கச்சிதமான வடிவத்திலும் தேர்ந்த சிற்பம் போல கலைநேர்த்தி பெற்றுள்ளன பிரபஞ்சனின் சிறுகதைகள்.
📝 My Summary
Collection of few short stories of Prabanjan.
❝ Few Quotes
அறிவு உண்மையை அது எங்கிருந்து வந்த போதிலும் இரு கை நீட்டி எதிர்கொள்வதுதானே இயல்பு.
இத்தனை கோடி மனிதர்கள் வாழ்கிற இந்த உலகத்தில் யார்தான் அநாதையாக இருக்க முடியும்? எல்லாரும் இல்லாமல் ஆகி, தன்னந்தனியனாக வாழ நேர்கிற அந்தக் கடைசி மனிதன்தானே அநாதையாக இருக்க முடியும்?
🙏 Thanks to:
Sweden Tamil Book Club, for suggesting this